பழங்குடியினத் தலைவரிடம் கருத்துக் கேட்டறிந்த ஒரே நாடு ஒரே சட்டம்! கூறிய விடயம் என்ன??

Badulla SriLanka Indigenous people one law One country Uruvarike vannila atto
By Chanakyan Jan 09, 2022 08:44 AM GMT
Report

“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான அரச தலைவர் செயலணிக்கு, பழங்குடியினத் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ கருத்துத் தெரிவித்தார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான அரச தலைவர் செயலணி, தற்போது ஊவா மாகாண மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து வருகிறது.

இது தொடர்பில் அரச தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 6ஆம் திகதியன்று மஹியங்கனை பழங்குடிக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்த செயலணியினர், அதன் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவிடம் இருந்து, பழங்குடியின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.

“ஒரே நாடு ஒரே சட்டத்தை” ஸ்தாபிப்பதற்கு அரச தலைவருக்கு பலம் இருக்கின்றதெனத் தாம் நம்புவதாகக் கூறிய வன்னில அத்தோ, எந்தத் தடைகள் ஏற்படினும், அவற்றைக் கடந்து இப்பணியில் வெற்றிபெற அரச தலைவர் அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

ஜனவரி 8ஆம் திகதியன்று பதுளை மாவட்டச் செயலகத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அரச தலைவர் செயலணி முன்னிலையில் கருத்துத் தெரிவித்த ஹஷீனா, தான் இஸ்லாமிய சட்டப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் பதுளை காதியார், எந்தவித அறிவிப்புமின்றி தனது கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுக் கொடுத்ததாகவும் கூறினார்.

இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிப் பேச ஆளில்லை என்றும் தம்மீது அக்கறை காட்ட எவரும் இல்லாததால், “ஒரே நாடு ஒரே சட்டம்” திட்டத்தை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

ஊவா வெல்லஸ்ஸ சுதந்திரப் போரில் முன்னணி வகித்த பிரித்தானிய ஆட்சியாளர்களால் காணி உரிமை பறிக்கப்பட்ட பல தலைமுறைகளின் பிரதிநிதிகள், நாட்டின் காணிச் சட்டம் இன்னமும் நியாயமாக நடைமுறைப்படவில்லை என்றும் வெளிநாட்டுப் படையெடுப்புகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முன்வந்த தமது குடும்பங்கள் மற்றும் அதன் விளைவாகச் சொத்துக்களையும் உயிர்களையும் இழந்த தமது குடும்பங்களுக்கு, சுதந்திரத்துக்குப் பின்னராக இதுவரை காலமும், எந்தவித நியாயமும் கிடைக்கவில்லை என்று அரச தலைவர் செயலணியின் முன்னிலையில் எடுத்துரைத்தனர்.

நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்குக் கிடைக்கும் உரிமைகளைப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிப்பதில்லை. இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் கவனஞ்செலுத்த வேண்டும்.

அதேபோன்று, தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகக் காணிப் பிரச்சினை காணப்படுவதாக, பல தோட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் செயலணியிடம் தெரிவித்தனர்.

“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான அரச தலைவர் செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித வண. கலகொடஅத்தே ஞானசார தேரர், உறுப்பினர்களான பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்ஹ, சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே, எரந்த நவரத்ன, பானி வேவல, ஆகியோருடன் அரச தலைவர் செயலணியின் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

17 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, New Malden, United Kingdom

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
கண்ணீர் அஞ்சலி