இன்று முதல் வழமைக்கு திரும்பும் சேவைகள்
Colombo
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Thulsi
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் இன்று முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இன்று முதல் மீண்டும்
இந்நிலையில், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள், இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி, கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய பிராந்திய அலுவலகங்களிலும் இன்று பொதுமக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு 20 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி