தமிழர் பகுதியில் கோர விபத்து; ஒருவர் பலி! 27 பேர் படுகாயம்!
தனியார் பேருந்து மற்றும் இராணுவத்தின் பார ஊர்தி ஒன்று நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 27 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த கோர விபத்து இன்று (14.04.2025) காலை திருகோணமலை (Trincomalee) - கந்தளாய் பிரதேசத்தில், அக்போபுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட 86 ஆவது மைல் கல்லில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
25 வயதான மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த முகமட் அஸ்கர் முகமட் அர்சாத் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டி (Kandy) மாவனல்ல, உயன்வத்த பகுதியில் இருந்து, 26 உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் திருகோணமலை நோக்கி வந்த, தனியார் பேருந்து ஒன்று, திருகோணமலையிலிருந்து தென்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பார ஊர்தி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயங்களுக்குள்ளானோர் கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்போபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
