இலங்கையர் தொடர்பில் வெளியான அபாய அறிவிப்பு
இலங்கையில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த நாட்டில் ஏற்படும் இறப்புகளில் சுமார் 34 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் ஏற்படுகின்றன என்று நேற்று (20) சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பில் மருத்துவர் மேலும் தெரிவிக்கையில், "நமக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதிக்கவேண்டும்
குறிப்பாக, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ நமது இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தால், நமது இரத்த அழுத்தத்திற்கு என்ன நேர்ந்துள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

சராசரியாக, நம் நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. 63.9 சதவீதம் பேர் சிகிச்சை பெறுவதில்லை. மேலும், சிகிச்சை பெறுபவர்களில் 39.1 சதவீதம் பேரின் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.
அதிக உப்பு உள்ள உணவை உட்கொள்வது இரத்த அழுத்தத்திற்கு ஒரு காரணமாகும்." என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |