யாழில் கடலாமையை வைத்திருந்தவர் கைது
யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேத்தான்குளம் பகுதியில் கடலமையுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரை கைது செய்தனர்.
பறிமுதல்
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 50 கிலோவிற்கும் அதிக எடையுள்ள இரண்டு ஆமைகளையும், ஆமைகளை கரைக்கு கொண்டு வர பயன்படுத்திய படகினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஆமைகள் இரண்டையும் இளவாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |