தமிழர் பகுதியில் கோடாவுடன் ஒருவர் கைது
Vavuniya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
வவுனியாவில் (vavuniya) கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பூவரசன்குளம் பகுதியில் நேற்றையதினம் (11.04.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, பூவரசன்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோயில் புளியங்குளம் பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா பீப்பாயுடன் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அதனை உடமையில் வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி