முல்லைத்தீவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!
முல்லைதீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(11) பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி S.H.மஹ்ரூஸ் உடலத்தை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கவலை
இந்நிலையில், கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி என்ற 62 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
 
அத்தோடு, கரிப்பட்டமுறிப்பு அம்பகாமம் ஒலுமடு உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் பாடசாலை மாணவர்கள் வீதிகளில் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பாக யானையின் தாக்குதல்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        