தொழிலாளர்களுக்கு கட்டாயமாக ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம்- இல்லையேல் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படையுங்கள்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டயமாக ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திற்கு ஒப்படைத்து விட்டு செல்லுமாறு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஷாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று கினிகத்தனை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தோட்ட தொழிலாளர்களின் பிரதான தொழில் தேயிலை பறிக்கும் தொழில் மேலத்தேய நாட்டில் உள்ள தேயிலையின் விலை உலக சந்தையில் விழ்ச்சியடைந்துள்ளது. தயாரிக்கப்படுகின்ற தேயிலையில் பிரச்சினைகள் காணப்படுகிறன. தேயிலைத் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த வரையில் சிறந்த முறையிலான கோப்பி வகையினை விவசாயதினைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலக வங்கியில் 5வகையான கோப்பி வகைகள் தற்பொழுது காணப்படுகிறன. சிறந்த முறையில் கோப்பியினை உற்பத்தி செய்தால் கிலோ ஒன்று 2000 ரூபாவிற்கு விற்கமுடியும்.
அதேபோல் தேயிலை கொழுந்தினை நேரகாலத்திற்கு பறிக்காவிட்டால் அந்த தேயிலை கொழுந்தினால் முறையான தேயிலை துாளினை தயாரிக்கமுடியாது. சில தேயிலைத் தோட்டங்களில் தேயிலை மரங்களுக்கு சீனி யூரியா போன்றன பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்துகின்ற போது அது விஷமாக மாறும் கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டது. ஆயிரம் ரூபாய் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எப்போது வழங்குவார்கள் என்பது எனக்கு தெரியாது. இது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளம் தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் செய்து கொள்ளப்படுகின்ற கூட்டு ஒப்பந்தத்தில் தேயிலை கொழுந்து பறிக்கு அளவு வழங்கபடுகின்ற கொடுப்பனவுகள் தொடர்பான விடயங்களை அனைத்தும் அந்த கூட்டு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருக்கும். துமிந்த சில்வா என்பவர் எமது கட்சியில் உள்ள ஒரு உருப்பினர் அவரின் ஊடாக எமது கட்சிக்கு பாரிய பலம் ஒன்று இருந்தது. அவருக்கு எமது கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் ஊடாகவே பிரச்சினை ஏற்பட்டது. அந்த பிரச்சினையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. அதில் இரண்டு பேர் பலியானார்கள்.
சிலர் காயமடைந்தனர். இது ஒரு பாரிய குற்றமாகும். அதிலும் துப்பாகி பிரயோத்தில் தான் பாரதலக்சுமன் பலியானார். முதலாவது துப்பாக்கி பிரயோகத்தில் துமிந்தசில்வா கிழேவிழுந்துவிட்டார். அவ்வாறு இருக்கும் போது துமிந்த சில்வா எப்படி மரணதன்டனை குற்றத்திற்கு உள்வாங்கப்படுவார் என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவை எனக்கு தெரிந்தவரையில் அவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது அவரை அழத்து வருவதற்கான அனுமதியினை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும். நான் நிதிமன்றத்தை ஒருபோதும் அவமதித்தது கிடையாது. அனால் முன்னாள் நீதியரசரை அவமதிக்கவில்லை.
ஆனால் அவருக்கு இலக்கு வைத்தேன். அதனால் தான் நான் சிறையில் இரண்டு வருடம் அடைக்கப்பட்டேன். அந்த காலப் பகுதியில் இருந்த நீதியரசரை நாய் என்று கூறினேன். அவரை இன்றும் நான் நாய்யென்று தான் அழைக்கின்றேன். நாளையும் அவரை நாய்யென்றுதான் அழைப்பேன். அந்த நாய் தான் என்னை இரண்டு வருடம் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டது.
ஒரு நபருக்கு இரண்டு வருடங்கள் சிறைதண்டனை வழங்கினாலும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருடைய வாக்குரிமை ஏழு வருடங்களுக்கு இருக்கும் இது தான் அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஏழு வருடத்தில் அந்த வாக்குரிமை இல்லாமல் செய்யப்படும் அதன் பிறகு வாக்களிக்கவும் முடியாது வாக்கு கேட்கவும் முடியாது. அவருடைய பிரஜாஉரிமை இல்லாது செய்யப்படும் அது தான் எனக்கும் நடந்தது என குறிப்பிட்டார்.