பாகிஸ்தானை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்..பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொண்ட ரணில் விக்ரமசிங்க

Ranil Wickremesinghe Pakistan Sri Lanka Government
By Kiruththikan Sep 04, 2022 09:56 AM GMT
Kiruththikan

Kiruththikan

in உலகம்
Report

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கடும் மழையினால் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலைமை குறித்து சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபிடம் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கியுள்ள நாட்டின் மூன்றில் ஒரு பகுதி

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்..பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொண்ட ரணில் விக்ரமசிங்க | Pakistan Floods Ranil Wickremesinghe Statement

பாகிஸ்தானில் பெய்யும் கனமழையால் அந்த நாட்டின் மூன்றில் ஒருபகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்துடன் ஒரே நாளில் 2,000 பேரை ராணுவம் மீட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. அந்த நாட்டின் சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாணங்களிலும் கடந்த 3 மாதங்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய நதியான சிந்து நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த நாட்டின் மூன்றில் ஒரு பகுதி முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

இதுவரை 1,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளது. 3.3 கோடிக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை தொடர்பான தொற்று நோய்கள் அதிவேகமாக பரவி வருகின்றன, சுமார் 20 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளன, 5,000 கி.மீ. தொலைவு சாலைகள் சேதமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளன, 250 க்கும் மேற்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.

10,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெள்ள மீட்புப் பணி

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்..பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொண்ட ரணில் விக்ரமசிங்க | Pakistan Floods Ranil Wickremesinghe Statement

4 மாகாணங்களிலும் 10,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக பணியாற்றி பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ராணுவ தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூன் மாதம் முதல் மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 50,000 பேரை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.

இதில் 1,000 பேர் உலங்குவானுர்திகள் மூலம் மீட்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 2,000 பேரை மீட்டு உள்ளோம்.

செப்டம்பர் வரை மழை நீடிக்கும் என்றுவானிலை மையம் அறிவித்திருப்பதால் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். நிவாரண முகாம்களில் ராணுவ மருத்து வர்கள் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இவ்வாறு ராணுவ தலைமை தெரிவித்துள்ளது.

இமயமலையின் பனிச்சிகரங்கள் உருகி சிந்து நதியில் வெள்ளம்

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்..பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொண்ட ரணில் விக்ரமசிங்க | Pakistan Floods Ranil Wickremesinghe Statement

பாகிஸ்தானின் காம்சாட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி அக்தர்ஹுசைன் கூறும்போது,

“பருவநிலை மாறுபாடு காரணமாக பாகிஸ்தானில் வரலாறு காணாத மழைபெய்து வருகிறது. இமயமலையின் பனிச்சிகரங்கள் உருகி சிந்து நதியில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

இது பேரழிவுக்கு வித்திட்டிருக்கிறது. இதை தடுக்கபுவி வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டும்.

இல்லையெனில் வரும் காலத்தில் இமய மலையின் பனிச்சிகரங்கள் உருகி இந்த பிராந்தியத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026