ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல்கருகி பலி!! பாகிஸ்தானில் துயரம்
fire
house
pakistan
By Vanan
பாகிஸ்தானில் வீடு ஒன்று தீப் பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கிழக்கே பஞ்சாப் மாகாணத்தின் முசாபர்கார் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த வீட்டில் இருந்த 7 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது இத்தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதனால் வீட்டில் இருந்த ஒருவரும் உயிர் தப்பவில்லை எனவும், இத்தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி