பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்- சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
murder
investigation
court
pakistan
sri Lanka
By Kalaimathy
பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்டதுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் பாகிஸ்தான் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 26 சந்தேக நபர்களும் குஜரன்வாலாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பிரியந்த குமாரவின் சடலம் லாஹூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
யு.எல் 186 ரக விமானத்திலே அந்த சடலம் கொண்டு வரப்படுவதுடன், குறித்த விமானம் இன்று மாலை 5 மணியளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.