பளையில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் அறுவருக்கு கொரோனா
corona
staff
bank of ceylon
palai branch
By Sumithiran
கிளிநொச்சி பளை நகரில் உள்ள இலங்கை வங்கியில் கடமையாற்றும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பளையில் உள்ள இலங்கை வங்கி கிளைக் காரியாலயத்தில் பயிற்சி பெற்று வந்த பளை செல்வபுரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது உடல் நிலை சீரின்மையால் விடுமுறை பெற்று வீட்டில் நின்றுள்ளார்.
தனது உடல் நிலையினை கருத்திற்கொண்டு பளை வைத்தியசாலையில்( 19 )அன்று பீசி ஆர் எடுத்துள்ள நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பளை இலங்கை வங்கியில் கடமையில் இருந்தவர்கள் தமக்கு உடல் நிலை சீர் இல்லை என சுகாதார துறையினருக்கு அறிவித்ததை அடுத்து அவர்களுக்கும் (19) அதே நாள் பீசி ஆர் எடுக்கப்பட்டது.
அதில் 05 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மொத்தமாக 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.