பிரித்தானியா, ஜேர்மன், கனடா நாடுகளிலிருந்து கொழும்புக்கு வந்த ‘பார்சல்கள்’
பிரித்தானியா, ஜேர்மன், கனடா ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொழும்பு தபாலகத்துக்கு போதைப்பொருள்கள் அடங்கிய பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நாடுகளில் இருந்து மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த முகவரிகளுக்கு பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகள் போலியானவை எனவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டசோதனையின்போதே, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குஷ் எனப்படும் கஞ்சா 472 கிராமும் 302 போதை வில்லைகளும் தனியார் பொதிச் சேவையினூடாக கொண்டுவரப்பட்ட பொதிகளுக்குள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
