நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் எரிந்து நாசம்! - கதறும் ஆளும்தரப்பு உறுப்பினர்
Colombo
Galle Face Protest
Sri Lankan political crisis
Gunapala Rathnasekara
Galle Face Riots
By Kanna
நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமே தன்னிடம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
தனது வீடு எரிக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் குறிப்பிட்டதாவது, "
நான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை. இரவும் பகலும் உறங்காமல் அறிவைப் பகிர்ந்து கொண்டு கண்டுபிடித்த சொத்துக்கள் இப்போது தீயாக எரிகிறது. வாழ்நாள் முழுவதும் அரசியலுக்கு வரமாட்டேன்" எனக் குறிப்பிட்டார்.
குணபால ரத்னசேகர பல்கலைக்கழக பேராசிரியரான அவர் பொதுஜன பெரமுன சார்பில் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இராஜாங்க அமைச்சராக செயற்பட்டுவந்த அவர், கடந்த வாரம் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 11 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்