ஒரே பாலின திருமண சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தேரர்!
ஒரே பாலின திருமண சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தால் வாக்களிக்க தங்கள் கிராமங்களுக்கு திரும்ப வேண்டாமென பெங்கமுவே நாலக தேரர்(Ven Bengamuwe Nalaka Thero) நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தச் சட்டமூலத்திற்கு வாக்களித்தால் அரசியல் ஈடுபாட்டைத் தவிர்ப்பதோடு இலங்கை பௌத்த காங்கிரஸ் உட்பட சிங்கள மற்றும் பௌத்த தேசிய அமைப்புக்கள் இதனை சட்டப்பூர்வமாக்குவதை எதிர்க்கும்.
தேர்தல் பிரச்சாரங்கள்
தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க வேண்டாம் அத்தோடு இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படக் கூடாது.
ஏதேனும் சந்தர்ப்பத்தில் அது இலங்கைக் கலாச்சாரம் மற்றும் நாட்டின் குடும்பக் கட்டமைப்பை கடுமையாகப் பாதிப்பதுடன் ஒரே பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்குவதனால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படும்.
அத்தோடு இதனை எதிர்ப்பவர்களுக்கும் அவர்களின் செயல்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரே பாலின திருமணங்கள்
ஒரே பாலின திருமணங்களை எந்த மதமும் ஏற்கவில்லை அத்தோடு பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.
பௌத்த தத்துவத்தால் வடிவமைக்கப்பட்ட நமது கலாச்சாரம் தனித்துவமானது மற்றும் நமது சமூகத்திற்கும் நமது நாட்டின் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும்.
இந்த நடவடிக்கைகள் யாருடைய நலன்களுக்கு சேவை செய்கின்றன என்பதைக் கண்டறிவது கடினம் அத்தோடு அவர்கள் அரசாங்கத்தில் உள்ள சக்திவாய்ந்த நபர்களால் அல்லது மேற்கத்திய செல்வாக்கால் இயக்கப்படலாம் என்ற சந்தேகம் உள்ளது.
எனினும், ஏதேனும் செல்வாக்கு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டின் கலாச்சாரம் மற்றும் குடும்பக் கட்டமைப்பை கடுமையாக சேதப்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
