மட்டக்களப்பில் 11 வெதுப்பக விற்பனையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!
மட்டக்களப்பில் முச்சக்கர வண்டிகளில் வெதுப்பக உணவு வகைகளை விற்பனை செய்த 11 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைக் களுவாஞ்சிகுடி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் கஜானன் தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் அனைவரும், தனிநபர் சுகாதாரம் பேணாமை மற்றும் மருத்துவச் சான்றிதழ் இன்மை போன்ற பல காரணங்களுக்காகவே பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெதுப்பக உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது.

அதன்போது அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த ஆலோசனைகளை அவர்கள் மீறிச் செயற்பட்டதன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர் கஜானன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 16 மணி நேரம் முன்