சஜித் தலைமையில் இன்றும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இலங்கையின் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் வன்முறையை எதிர்க்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க தீர்மானித்து நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக இரண்டாவது நாளாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க முடிவெடுத்தனர்
இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்காமல் இருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சி கோரியப்படி குழு ஒன்றை அமைத்து கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்திய பிரச்சனைக்கு தீர்வைக் காணவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.