திருகோணமலையில் ஆரம்பமான வாக்களிப்பு

Mannar Sri Lanka Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Sathangani Nov 14, 2024 06:05 AM GMT
Report

புதிய இணைப்பு

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திலே இன்று காலை 10.30 மணி அளவில் 23% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

காலை 7.00 மணிமுதல் 318 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருவதாகவும், மாவட்டத்தினை பொறுத்தவரையிலே காலநிலையும் தேர்தலுக்கு ஒத்துழைப்பதன் காரணமாக கனிசமான அளவு வாக்குப் பதிவுகள் இடம்பெறக்கூடும் என்பதனை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டிருப்பதுடன் மக்களும் மும்முறமாக வாக்குப்பதிவுகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முதலாம் இணைப்பு

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கான (Sri Lanka parliamentary election) வாக்களிப்பு நடவடிக்கைகள் திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளன.

திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள 318 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று (14) காலை 7.00 மணி முதல் சுமுகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழர் பகுதிகளில் மிகவும் மந்த கதியிலான வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வந்த போதிலும் காலை 9.00 மணிக்குப் பின்னராக பொதுமக்கள் மும்முரமாக  வாக்களிப்பில் ஈடுபட்டதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : 6 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : 6 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

வாக்களிக்க தகுதி பெற்றோர்  

அத்துடன் விசேடமாக வயோதிபர்கள் மும்முரமாக தமது வாக்குப் பதிவுகளை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 315,925 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலையில் ஆரம்பமான வாக்களிப்பு | Parlimentary Election 2024 Voting Start In Trinco

திருகோணமலை தேர்தல் தொகுதியில் 105,005 வாக்காளர்களும் மூதூர் தேர்தல் தொகுதியில் 123,363 வாக்காளர்களும், சேருவில தேர்தல் தொகுதியில் 87,557 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்கு எண்ணும் நிலையமாக திருகோணமலை விபுலானந்தா கல்லூரியும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் பதிவான மொத்த வாக்கு வீதம் !

நுவரெலியாவில் பதிவான மொத்த வாக்கு வீதம் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்கு வீதம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்கு வீதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்