அரச வங்கியொன்றில் இடம்பெற்ற பெரும் மோசடி அம்பலம்!
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Sri Lanka Banks
By Dilakshan
99.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக அரச வங்கியின் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தப்பட்ட வங்கியின் அடகுப் பிரிவில் பணிபுரிந்த சந்தேக நபர்கள், 24 காரட் தங்கம் போல் போலி தங்கப் பொருட்களை அடகு வைத்து பணத்தை எடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை விசாரணை
சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் ஏற்கனவே வெளிநாடு சென்றுவிட்டதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
மோசடியில் ஈடுபட்ட மேலும் பல வங்கி அதிகாரிகள் குறித்து காவல்துறை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி