ஜெனிவாவில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக இந்தியாவின் அழுத்தம் இருக்காது - அமைச்சர் நம்பிக்கை
sri-lanka
human
rights
profg
By Vasanth
ஸ்ரீலங்காவுக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது எனவும் ஜெனிவா விவகாரத்தில் இந்தியா ஸ்ரீலங்காவுக்கு ஆதரவளிக்கும் அதேநேரம் அதற்கான அவசியமும் காணப்படுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும்.
நாட்டின் உள்ளக விவாரத்தில் தலையிடவும். ஸ்ரீலங்காவுக்க எதிராக செயற்படவும் மனித உரிமை ஆணையாளருக்கு அதிகாரமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.