ரணிலின் அரசில் இனப்பிரச்சனைக்கு தீர்வு - நம்ப மறுக்கும் பீரிஸ்
இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த அனைத்து அரசாங்கங்களும் எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்ததாக தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இவ்வாறான நிலையில் இனப் பிரச்சினையை தீர்க்கப்போவதாக தற்போதைய அரசாங்கம் கூறுவதை எவராலும் நம்ப முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வை வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தோல்வியில் முடிந்த முயற்சி
நாட்டில் 6இல் 5 பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் இருந்திருக்கிறது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் இருந்திருக்கிறது. இந்த அரசாங்கங்கள் எல்லாம் இனப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் அந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன எனவும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில்அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியும் என எவராலும் நம்ப முடியுமா? உலகில் உள்ள எவரும் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை கருத்திற்கொள்வார்களா என நான் கேட்க விரும்புகிறேன்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. தென்னாபிரிக்காவில் உள்ளதுபோல உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையா அமைக்கப்போகிறீர்கள். இந்த ஆணைக்குழு ஆழமான விசாரணைகளை மேற்கொண்டது.
கொலை, கொடூரமான
குற்றச்செயல்களை
செய்தவர்கள் தொடர்பில்
இந்த ஆணைக்குழு
விசாரணைகளை செய்தது.
இதில் குற்றச்சாட்டுக்களை
ஒப்புக்கொண்டவர்களுக்கு
பொதுமன்னிப்பு
வழங்கப்பட்டது. இதனையா
நாமும் செய்யப்போகிறோம்
எனவும் கேள்வி எழுப்பினார்.