ஏற்பட்டுள்ள சிக்கல்..! ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான அறிவிப்பு
ஓய்வூதிய திணைக்களத்தின் ஓய்வு பெற்றோர் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இன்று திட்டமிட்டபடி ஓய்வூதியம் வழங்க முடியும் என ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் கே.ஜி.ஆர். ஜயநாத் (K.G.R. Jayanath) தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காரணமாக நெருக்கடியான நிலைகள் உருவாகியுள்ளதாகவும் கடந்த 7 நாட்களாக இந்த கோளாறு நீடித்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள்
அண்மையில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் மற்றும் விரைவில் ஓய்வுபெற உள்ள அதிகாரிகளின் தகவல்களை புதுப்பிக்கும் கணினி கட்டமைப்பே இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறுகளினால பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த கோளாறு காரணமாக ஓய்வூதியம் வழங்கும் பணிகளில் எந்தவித தடையும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், இன்று திட்டமிட்டபடி ஓய்வூதியங்களை வழங்க முடியும் எனவும் ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் கே.ஜி.ஆர். ஜயநாத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சுமார் 7 இலட்சத்து 90 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
