விலை அதிகரிப்பை மக்களே சுமக்க வேண்டும் - அரச தரப்பு பதில்
மக்கள் அரசியல்வாதிகளை ஏற்றுக்கொண்ட காலம் முடிந்து விட்டது எனவும் அரசியல்வாதிகள் மக்களை ஏற்றுக்கொள்ளும் காலம் வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickremanayake) தெரிவித்துள்ளார்.
பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது, எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விதுர விக்ரமநாயக்க,
உலகில் எரிபொருள் விலை குறையும் போது எமது நாட்டில் விலை குறைவதில்லை. காரணம் கடவுளே.
எரிபொருள் விலை அதிகரித்தால், கட்டாயம் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். அந்தச் சுமையை நாட்டு மக்களே சுமக்க வேண்டும்.
நாட்டில் பொருளாதார முகாமைத்துவம் இல்லாததே பிரதான பிரச்சினை. ஆனால் இலக்கை நோக்கி செல்லும் தெளிவான பாதை இருக்க வேண்டும் என விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.