பயிலுனர் பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
soon
appointment
trainee-graduates
By Sumithiran
அரச சேவையில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பயிலுனர் பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் ஜே.எம். ஜே.ரட்ணசிறி இந்த வருட வரவு செலவு திட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இது நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
தற்போது 50,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அரச சேவையில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் தமது விருப்பத்தின் பேரில் அதே பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உறுதிப்படுத்தப்படுவர் என செயலாளர் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்