விடுதியில் மது அருந்திய நபர் மரணம் - விசாரணையில் வெளிவந்த விடயம்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By pavan
கடவத்தை - ராகம வீதியில் உள்ள விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (21) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கடவத்தை - உடகரகஹமுல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் விபத்து
விடுதியின் மேல் மாடி அறையில் தங்கியிருந்த நபர், நேற்றிரவு தனியாக மது அருந்தியுள்ளார்.
மதுபோதையில் காற்று வாங்குவதற்காகத் தங்கியிருந்த அறைக்குப் பின்னால் உள்ள பெல்கனிக்கு வந்த போது அவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடவத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தாயுமான தலைவன்…! 6 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி