ராஜபக்சாக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள பிள்ளையானின் கைது..!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமற்போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமை ராஜபக்சக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என முன்னிலை சோசலிஷக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முன்னிலை சோஷலிசக் கட்சியின் கல்விச் செயலாளரான புபுது ஜயகொட தெரிவித்துள்ளதாவது,
லலித், குகன் கடத்தலின் பின்னணியில் ராஜபக்சர்கள்
எமது கட்சி தோழர்களான லலித், குகன் ஆகியோர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடனும் ராஜபக்சர்களுக்கு தொடர்புள்ளது. கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் ராஜபக்ச ஆட்சிக்கு தொடர்புள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தோம்.
பிள்ளையானின் சட்டத்தரணியான கம்மன்பில, ராஜபக்சர்களின் முகவராகவே செயற்படுகிறார். ராஜபக்ச மற்றும் பிள்ளையானுக்கிடையிலான தொடர்பாடலை ஏற்படுத்துவதே கம்மன்பிலவின் பணியாகும்.
ராஜபக்சர்களின் முகவராக உதய கம்மன்பில
உதய கம்மன்பில அண்மைய காலங்களில் சட்டத்தரணியாக பெரிதாக செயற்படவில்லை. அப்படி இருக்கையில் தனது சட்டத்தரணியாக பிள்ளையான் அவரை தேர்வு செய்ததன் நோக்கம் தெளிவாகின்றது.
ரணில் விக்ரமசிங்க ராஜபக்சாக்களின் அவதாரம்
ரணில் விக்ரமசிங்கவும் பிள்ளையானுடன் உரையாட அனுமதி கோரியுள்ளார். ரணில் விக்ரமசிங்க என்பவரும் ராஜபக்சாக்களின் அவதாரம் என்பது இதன்மூலம் புரிகின்றது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
