தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை

India Plane Crash Flight
By Raghav Jun 16, 2025 09:53 AM GMT
Report

புதிய இணைப்பு

அஹ்மதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டாவது கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டாவது கறுப்பு பெட்டி இன்று (16.06.2025) காலை மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த 12 ஆம் திகதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் 270 பேர் உயிரிழந்தனர். 

இந்த நிலையில் முன்னதாக விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்படிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏழாம் இணைப்பு

நேற்றைய தினம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. 

AI171 விமானமாகஇயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.

ஈரான் மீது அத்துமீறிய இஸ்ரேல் இனி என்ன நடக்கும் என்ற கேள்வியோடு உலகம்

ஈரான் மீது அத்துமீறிய இஸ்ரேல் இனி என்ன நடக்கும் என்ற கேள்வியோடு உலகம்

விமானத்தின் கருப்பு பெட்டி

இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்தனர்.

இது குறித்து அகமதாபாத் விமான நிலைய வட்டாரங்கள் தரப்பில், "ஏர் இந்தியா விமானமானது ஓடு பாதையில் சரியான வேகத்தில்தான் இயக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை | Plane Crash Near Ahmedabad Airport

இந்த நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஆய்வு செய்து விசாரணை நடத்தினால் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால் பகுதியில் கருப்பு பெட்டி

விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கருப்பு பெட்டியில் விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும் பதிவாகும். மேலும், விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை ஆகிய தகவல்களும் பதிவாகும்.

தீ விபத்து ஏற்பட்டாலோ, கடலில் மூழ்கினாலோ கருப்பு பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாது. இந்நிலையில் தான் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் பதிவான தகவல்களை பெற 15 நாட்கள் வரை ஆகும். அதன் பின்னரே விமான விபத்திற்குரிய காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

ஆறாம் இணைப்பு

அகமதாபாத் நகரில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தாம் இணைப்பு

Update Time : 06.06 p.m : குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் எயார் இந்தியா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியிலிருந்த 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை | Plane Crash Near Ahmedabad Airport

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை | Plane Crash Near Ahmedabad Airport

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை | Plane Crash Near Ahmedabad Airport

நான்காம் இணைப்பு

Update Time : 04.31p.m : குஜராத் - அகமதாபாத் இல் இடம்பெற்ற விமான விபத்தில் 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி செய்தி வெளியிட்டுள்ளன.

முன்றாம் இணைப்பு

Update Time : 03.44 p.m:  குஜராத் - அகமதாபாத் இல் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் தற்பொது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில், 3.19 மணிக்கு ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் பயணித்த பயணிகள் தொடர்பில் தகவல் வெயியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றது.

இவர்களில் 169 பேர் இந்தியர்கள், எனவும் 53 பேர் பிரித்தானிய நாட்டவர்கள்எனவும் 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகேய நாட்டவர்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

Update Time : 03.29 p.m : குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மதியளவில் லண்டன் புறப்பட்ட ஏயார் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த விமானத்தில் சுமார் 240க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Update Time: 03.20 p.m : குறித்த விமானத்தில் முன்னாள் குஜராத் முதலமைச்சர் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

முதலாம் இணைப்பு 

இந்தியாவின் (India) -  குஜராத் (Gujarat) மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் எயார் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்தின் போது விமானத்தில் 200 இற்கும் மேற்பட்ட பயணிகள் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மின்மினி பூச்சிகளை பார்க்கும் கடைசி தலைமுறை : விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை

மின்மினி பூச்சிகளை பார்க்கும் கடைசி தலைமுறை : விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை

தையிட்டி விகாரையை காக்கும் காடையர்கள்...! தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து

தையிட்டி விகாரையை காக்கும் காடையர்கள்...! தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016