முதலமைச்சர் விஜய்க்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி : இணைந்து பணியாற்றவும் அழைப்பு
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று(10) முறைப்படி பதவியேற்றுக்கொண்டநிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்
"மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.@TVKVijayHQ
— Narendra Modi (@narendramodi) May 10, 2026
புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது தேர்தல் பரப்புரைகளின் போது மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பேன் என்று கூறியிருந்த நிலையில், பிரதமரின் இந்த 'இணைந்து பணியாற்றுவோம்' என்ற அழைப்பு, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |