பொறுப்பில்லாமல் செயற்படும் பருத்தித்துறை போக்குவரத்து சபை..! பரிதவிக்கும் மக்கள்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையினர் தமது பேருந்து சேவைகளை சீராக மேற்கொள்ளாமயால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
நேற்று(25) யாழ்ப்பாணம் பருத்தித்துறை 750 வழித்தடத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6:00 மணிக்கு பருத்தித்துறை நோக்கி வரவேண்டிய பேருந்து 6:50 மணிக்கே தனது சேவையை தொடர்ந்ததால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக பல்வேறு விமர்சனங்கள்
பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு விமர்சனங்கள் மக்களால் முன்வைக்கபட்டு வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் இது தெடார்பாக உரிய கவனமெடுத்து போக்குவரத்திற்கு சீரான வழிசமைக்க வேண்டுமென பயணிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
மருதங்கேணிஅரச பேருந்து
பருத்தித்துறையில் இருந்து 08.30 மணிக்கு மருதங்கேணிக்கு வருகை தரும் அரச பேருந்து மக்களை நீண்ட நேரம் காக்கவைத்து அலைக்கழிப்பது தொடர்பாக மருதங்கேணியில் இன்று(26) முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறையிலிருந்து கேவில் நோக்கி காலை 8.30 மணிக்கு புறப்படும் அரச பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மருதங்கேணி பகுதிக்கு வருகை தந்து அங்கே 40 நிமிடங்களுக்கு மேலாக மேலதிகமாக தரித்து நிற்கின்றது.
இதனால் உரிய நேரத்துக்கு செல்ல வேண்டிய மக்கள், வேலை ஆட்கள், மாணவர்கள் பாதிப்படைகின்றனர். குறித்த அரச பேருந்தானது அதிக நேரம் காத்திருப்பதால் ஏனைய பேருந்துகள் மற்றும் ஆட்டோ சாரதிகள் பாதிப்படைகின்றனர்.
நேரத்தை கடைப்பிடிக்காமல் தான்தோன்றித்தனமாக மக்களை அலைக்கழிக்கும் அரச பேருந்து மீது நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை போக்குவரத்து சபை இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பயணிகள் பலமுறை கேட்டுக் கொண்டனர்.
ஆனால் எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இன்றும் அதே அரச பேருந்து மருதங்கேணி பகுதியில் பல நிமிடங்கள் தரித்து நின்றதால் மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 17 மணி நேரம் முன்