27.5 மில்லியன் மோசடி! முன்னாள் அமைச்சரின் சகோதரர் அதிரடி கைது
SJB
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
FCID - Financial Crimes Investigation Division
By Dhilak
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபான உரிமம் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 27.5 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர், மதுபான உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, 2024-ஆம் ஆண்டில் ஒரு முறைப்பாட்டாளரிடமிருந்து ரூ. 27.5 மில்லியனைப் பெற்றுக்கொண்டு, ஆனால் அவ்வாறு செய்யத் தவறியதாகக் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
மதுபான உரிமப் பணியகத்தின் (CCIB) விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்