ஈரானின் திடீர் தாக்குதல்கள்! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு
மத்திய கிழக்கில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் பதற்றநிலை காரணமாக வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, குவைத் மற்றும் தம்மாம் நோக்கிச் சென்ற இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தரையிறக்க முடியாமல் போனதை தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குவைத் வானில் வட்டமிடத்த நிலையில், இரண்டு விமானங்களும் இன்று காலை மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளன.
ஈரான் நடத்திய தாக்குதல்
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரியொருவர், நேற்று மாலை 5:10 மணிக்கு குவைத் நோக்கிப் புறப்பட்ட UL229 மற்றும் மாலை 6:36 மணிக்கு தம்மாம் நோக்கிப் புறப்பட்ட UL253 ஆகிய இரண்டு எயர்பஸ் A321neo ரக விமானங்கள் இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விமானங்கள் மத்திய கிழக்கு வான்பரப்பை நெருங்கிய வேளையில், ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகக் குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களது வான்வெளிகளைத் தற்காலிகமாக மூடியுள்ளன.
இதனால் உடனடியாகத் தங்கள் இலக்குகளை நோக்கிப் பயணிக்க முடியாத இரு விமானங்களும், பாதிக்கப்பட்ட வான்பகுதிக்கு அருகே சுமார் ஒரு மணி நேரமும் 10 நிமிடங்களும் வானில் வட்டமடித்துக் காத்திருந்துள்ளன.
தற்காலிக வான்வெளி மூடல்
பின்னர் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, விமானிகள் இரு விமானங்களையும் பாதுகாப்பாக அந்தந்த நாடுகளின் சேருமிடங்களில் தரையிறக்கியுள்ளனர்.

இந்தத் தற்காலிக வான்வெளி மூடலால் மேலும் பல சர்வதேச விமானங்களும் வானில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து, தத்தமது சேருமிடங்களைச் சென்றடைந்த அந்த இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களும் இன்று (15) காலை மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |