யாழ். சுன்னாகத்தில் அதிரடியாக கைது செயய்யப்பட்ட எழுவர்
யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் வைத்திருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றும் (28) இன்றும் (29) சுன்னாகம் காவல்துறையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் போதை மாத்திரைகளும், இருவர் ஐஸ் போதைப்பொருளும், இருவர் ஹெரோயின் போதைப் பொருளும் வைத்திருந்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
அவர்களில் ஒருவர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே 8 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டமைக்கான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றதாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யாழ். (Jafna) சுன்னாகம் பகுதியில் நேற்றையதினம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
