மட்டு - ஐத்தமலை காவல்துறை அதிகாரியொருவர் அதிரடி கைது!
அம்பாறையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் ஒரு காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாறை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு (OIC)க்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, அம்பாறை காவல் பிரிவில் உள்ள காவன்திஸ்ஸ கல்லூரிக்கு அருகில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான விசாரணைகளில், அந்த நபர் மட்டக்களப்பில் உள்ள ஐத்தமலை காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவல்துறை அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
பணிநீக்கம்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் உள்ள மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) மே 17 ஆம் திகதி முதல் அந்த அதிகாரியை பணிநீக்கம் செய்துள்ளார்.

இதேவேளை, சந்தேக நபரான காவல்துறை அதிகாரியை, மே 23 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்