தமிழர் பகுதியில் களவாடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான தங்கம் மீட்பு!
கிளிநொச்சி (Kilinochchi) காவல்துறை பிரிவுக்குட்பட்ட உதயநகர் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் களவாடப்பட்ட ஒன்பது இலட்சம் பெறுமதியான தங்கம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 16.06.2024 அன்று குறித்த வீட்டில் வைக்கப்பட்ட நகையை தேடிய போது காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் நேற்று முன்தினம் (20.06.2024) கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
நகைகள் மீட்பு
இதனையடுத்து களவாடப்பட்ட நகையுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கிளிநொச்சி காவல்துறையினர் இன்று (22) கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 9 இலட்சம் பெறுமதியான நகைகளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் பல தரப்பட்ட குற்றங்களை இழைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி குற்ற தடுப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![Gallery](https://cdn.ibcstack.com/article/5f6c8868-e44e-4c3e-9d80-baaf0018e921/24-667688e307cf8.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d8577abf-8b70-447d-9549-f7d0cd95a063/24-667688e3ef905.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 13 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)