ரிஷாட் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் பெற்றோரிடம் பல மணி நேர வாக்குமூலம்!
police
statement
rizard
child labor death
By Kalaimathy
ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரியும் சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் அவரது பெற்றோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பொலிஸ் குழு நேற்று காலை 7.30 மணியளவில் டயமகவில் அமைந்துள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்று சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர்.
இதன்போது இஷாலினியின் தாய், தந்தை, சகோதரர் மற்றும் கொழும்பு, பெளத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ரிஷாட் பதியூதீனின் இல்லத்திற்கு சிறிமியை பணிக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்த தரகர் ஆகியோரிடம் வாக்கு மூலங்களை பதிவுசெய்திருந்தனர்.
சிறப்பு பொலிஸ் குழுவுக்கு மேலதிகமாக, நுவரெலியா பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் டயகம பொலிஸாரும் மரணம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி