ரணிலுக்கு ஆதரவாக மக்களை திரட்டிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிக்கினர்!

Colombo Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Magistrate Court Ranil Wickremesinghe Arrested
By Dilakshan Aug 28, 2025 08:53 AM GMT
Report

கடந்த 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் வகையில் மக்களை ஒன்று திரட்டிய 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, அவர்கள் தொடர்பான தகவல்களை புலனாய்வு அமைப்புகளினால், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அடையாளம் காணப்பட்டவர்களில் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிணியிடம் வாக்குமூலம்: ரணில் சந்திப்பு விவகாரம் குறித்து சிஐடி விசாரணை!

ஹரிணியிடம் வாக்குமூலம்: ரணில் சந்திப்பு விவகாரம் குறித்து சிஐடி விசாரணை!


புலனாய்வு அறிக்கைகள்

அதன்போது, மக்கள் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து பேருந்துகளால் கொண்டு வரப்பட்டதாகவும், அதற்கான செலவினத்தை மேற்கொண்டவர்களையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ரணிலுக்கு ஆதரவாக மக்களை திரட்டிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிக்கினர்! | Politicians Gathered People In Court Identified

மேலும், கோட்டை நீதிமன்றம் முன்பு கூடியிருந்த மக்களுக்கான உணவுப்பொருட்கள், எதிர்க்கட்சித் தலைவர்களால் விநியோகிக்கப்பட்டதாகவும் அதனையும் கண்காணித்து புலனாய்வாளர்கள் தங்களது அறிக்கைகளில் இணைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதற்கமைய, கோட்டை நீதவான் நேற்று (27) சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது

தலைமறைவான ராஜித நாளை வெளியே வரவுள்ளார்! வெளியான அறிவிப்பு

தலைமறைவான ராஜித நாளை வெளியே வரவுள்ளார்! வெளியான அறிவிப்பு


நீதிமன்றில் சமர்பிப்பு

இதன்படி, எதிர்ப்பு குழுக்களை அடையாளம் காண புலனாய்வு அறிக்கைகள் மற்றும் விசாரணைத் தகவல்களை ஒருங்கிணைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு ஆதரவாக மக்களை திரட்டிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிக்கினர்! | Politicians Gathered People In Court Identified

புலனாய்வு பிரிவினரால் சேகரிக்கப்பட்ட காணொளிகள், புகைப்பட காட்சிகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் விசாரணைக்காக பயன்படுத்தப்பட உள்ளன.

அதற்கான முழுமையான, திருத்தமில்லாத காட்சிகள் ஊடக நிறுவனங்களிடமிருந்தும் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவ்விசாரணை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எஸ்.பி. ஷானி அபேசேகரவின் நேரடி மேற்பார்வையில், உதவி காவல்துறை மேற்பார்வையாளர் தலைமையிலான குழுவால் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ரணிலுக்கு நாடாளுமன்ற வாய்ப்பு: பதவி விலக காத்திருக்கும் எம்பி!

ரணிலுக்கு நாடாளுமன்ற வாய்ப்பு: பதவி விலக காத்திருக்கும் எம்பி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்