அரசாங்கம் மாறியவுடன் இ.போ.சபையில் அதிவேகமாக மாறும் பதவிகள் - திலும் அமுனுகம ஆவேசம்
அரசியல் தலையீடுகளை அதிகளவில் கண்டுகொள்ளக்கூடிய இடமாக இலங்கை போக்குவரத்து சபையை அடையாளப்படுத்த முடியும் எனவும் அரசாங்கங்கள் மாறியவுடன் பதவிகளும் அதிவேகமாக மாறுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நடத்துநர் டிப்போ கண்காணிப்பாளராகவும், டயர் மாற்றிய தொழிலாளி டிப்போ பொறியாளராகவும் மாறுதல் போன்ற பதவிமாற்றங்கள், அரசாங்கம் மாறிய உடனேயே நடைபெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை போக்குவரத்து சபையில் காணப்படும் பாதகமான செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கற்ற பொறிமுறையை மாற்ற முடியாது என குறிப்பாக தகுதியற்றவர்கள் இலங்கை போக்குவரத்து சபையில் நியமனம் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, முறையான நடைமுறைக்கு அமைவாக இலங்கை போக்குவரத்து சபை பதவிகளுக்கு பொருத்தமானவர்களை மாத்திரம் நியமிக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.