தலைமன்னாரில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் : நீதிமன்றின் உத்தரவு
இலங்கையின் - தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலார்களுக்கும் எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை விதித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று (26) மன்னார் நீதவான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் கடந்த மாதம் 19 ஆம் திகதி தலைமன்னார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த 10 கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் ஒவ்வொரு கடற்றொழிலாளருக்கும் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு வழக்கின் சான்று பொருட்களை அரசுடமையாக்கவும் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |