யாழில் காவல்துறையினருக்கு மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Jaffna
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    பௌர்ணமி தினத்தில் காவல்துறையினருக்கு மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திலேயே குறித்த சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு இது குறித்து இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
தகவலறிந்த காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்ற போதே அவர்களுக்கு மதுபாவனை விற்பனை செய்யப்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 36 வயதான சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்