ஹட்டனில் விபத்து : முன்பள்ளி மாணவர்கள் உட்பட எழுவர் காயம்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் நியூவெலிகம பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
எதிர் திசையில் பயணித்த காருடன் முச்சக்கரவண்டி மோதியதில் இன்று (12) காலை 8.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு முன்பள்ளி மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் தெரிவிப்பு
முச்சக்கர வண்டியின் முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற உதிரி பாகம், காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காரை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் நோர்வூட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில், ஒரு பிள்ளையை தவிர ஏனைய ஆறு பேரும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
