அமெரிக்கர்களே ஒன்றுபடுங்கள்! அதிபர் பைடனின் முதல் கோரிக்கை
அமெரிக்க தேசம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் சவால்களை வெற்றி காண்பதற்கு மக்கள் ஒன்றுபடவேண்டும் என புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின் அவர் ஆற்றிய உரையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த உரையில், இது அமெரிக்காவின் நாள், இது ஜனநாயகத்தின் நாள், வரலாற்றினதும் நம்பிக்கையினதும் நாள் .
அமெரிக்கா பாரிய சவாலில் இருந்து வெற்றிபெற்றுள்ளது, இன்று நாங்கள் ஒரு வேட்பாளரின் வெற்றியை கொண்டாடவில்லை. ஜனநாயகம் என்ற நோக்கம் வெற்றிபெற்றதை கொண்டாடுகிறோம். ஜனநாயகம் என்பது விலைமதிப்பற்றது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
இந்த புனிதமான பகுதியில் – சிலநாட்களிற்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகள் நாடாளுமன்றத்தின் அடிப்படையையே ஆட்டக்காணசெய்தது.
இந்த புனிதமான பகுதியில் நாங்கள் ஒரு தேசமாக ஆண்டவனின் கீழ் பிளவுபடாமல் கடந்த இரண்டு நூற்றாண்டுகளைப் போல அமைதியான முறையில் அதிகாரத்தை கையளிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளோம்.
இன்று இந்த ஜனவரி நாளில் எனது முழு ஆன்மாவும் அமெரிக்காவை ஐக்கியப்படுத்துவது எங்கள் மக்களை ஐக்கியப்படுத்துவது தேசத்தை ஐக்கியப்படுத்துவது குறித்தே சிந்திக்கின்றது என்றார்.