தமிழ்மக்களின் களமாக விளங்கும் அதிபர் தேர்தல்: தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து

Election Commission of Sri Lanka Tamils Sri Lanka Election
By Beulah Dec 25, 2023 02:07 AM GMT
Report

எதிர்வரும் அதிபர் தேர்தல் கனதியானதொரு செய்தியைக் கூறுவதற்கான களமாகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்குவது குறித்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டியது அவசியமா? ஆமெனில், அதற்குப் பொருத்தமான நபர் யார்? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணிகள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை : பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து

சட்டத்தரணிகள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை : பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து

தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகள்

அவ்வகையில், இவ்விடயம் தொடர்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன்,

தமிழ்மக்களின் களமாக விளங்கும் அதிபர் தேர்தல்: தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து | President Election 2024 Tamil Politicians

“இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகளும், டெல்லிக்கு வழங்கும் வாக்குறுதிகளும் அடுத்த கணமே காற்றில் பறக்கவிடப்படுகின்றனர்.

எனவே சிங்கள அரசியல் தலைமைகளின் அசமந்தப்போக்கைச் சுட்டிக்காட்டக்கூடியவாறு எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் பொது வேட்பாளரொருவரை நிறுத்தி, அவருக்கு வாக்களிக்கவேண்டியது அவசியம்.” என்றார்.

அதேவேளை தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தனது பெயரை முன்மொழிந்தால், அப்போதைய கள நிலவரங்களை அடிப்படையாகக்கொண்டு அதனைப் பரிசீலனை செய்வதற்குத் தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர்

அதன்படி இதுபற்றிக் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

தமிழ்மக்களின் களமாக விளங்கும் அதிபர் தேர்தல்: தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து | President Election 2024 Tamil Politicians

“தமிழ்மக்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்கும் வகையில் இரண்டாம் விருப்பத்தெரிவின்றி, தமிழ் வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களித்தால் தான் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்குவதில் பயனிருக்கும்.

ஆனால் சி.வி.விக்கினேஸ்வரனோ அல்லது எம்மைத் தவிர்த்த வேறு எந்தவொரு தரப்பினரோ தமிழ்மக்களை ஏமாற்றி, அவர்களைத் தமக்கு வேண்டிய நபருக்கு வாக்களிக்கச்செய்யும் வகையிலான உத்தியாகவே இதனைப் பயன்படுத்திக்கொள்வர்.

ஏனெனில் குறித்த அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இரண்டாவது விருப்பு வாக்கை யாருக்கும் அளிக்கக்கூடாது என அவர்கள் உறுதியாகக் கூறமாட்டார்கள்.

ஆகவே பொது வேட்பாளரை நிறுத்துவதால் எதிர்பார்க்கப்படும் உரிய பலனைப் பெறமுடியாது. ஆனால் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் வலுவானதொரு செய்தியைக் கூறியேயாகவேண்டும்.

எனவே அத்தேர்தலில் தமிழர்கள் அனைவரும் வாக்களிக்காமல் முற்றுமுழுதாக ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.” என்றார்.

தமிழ்த்தேசிய விடுதலைக்கான இலக்கு

அதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் அறியத்தருகையில்,

தமிழ்மக்களின் களமாக விளங்கும் அதிபர் தேர்தல்: தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து | President Election 2024 Tamil Politicians

“தமிழ்த்தேசிய விடுதலையை இலக்காகக்கொண்ட சமஷ்டி முறைமையிலான தீர்வை முன்னிறுத்தக்கூடியவகையில் தமிழ்த்தேசியம் சார்ந்த ஒருவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்கலாம்.

தமிழ் வேட்பாளரொருவர் அதிபர் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு எனினும், இதன்மூலம் தமிழர்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய கனதியான செய்தியை வெளிப்படுத்தமுடியும்.

அதேபோன்று விரும்பினால் இரண்டாவது விருப்பு வாக்கை பெரும்பான்மையின வேட்பாளருக்கு வழங்கலாம்.

தமிழ்மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் களமாக எதிர்வரும் அதிபர் தேர்தலைப் பயன்படுத்தலாம் என்பதே எனது அபிப்பிராயம்.” என்றார். 

அசுர வளர்ச்சியடையும் புதிய கட்சி: ரணில் தலைமையிலான அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அசுர வளர்ச்சியடையும் புதிய கட்சி: ரணில் தலைமையிலான அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்          


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி