மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மேலும் இரு புலமைப்பரிசில் திட்டங்கள் அறிமுகம்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka President of Sri lanka
By Sathangani May 08, 2024 04:21 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை சிறிலங்கா அதிபர் நிதியம் (President’s Fund) ஆரம்பித்துள்ளது.

அதன்படி, பிரிவெனா மற்றும் பெண் பிக்குணி கற்றை நிறுவங்களில் கற்கும் பிக்கு மற்றும் பிக்குணிகளுக்கும் ஏனைய மாணவர்களுக்கும், க.பொ.த உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்குமான புதிய புலமைப் பரிசில் வேலைத்திட்டம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் பெண் பிக்குணி கற்றை நிறுவங்களுக்கும், ஏனைய மாணவர்களுக்கான 822 கற்கை நிறுவனங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, இதற்காக மேற்படி கற்கை நிறுவனமொன்றுக்கு 06 புலமைப்பரிசில்கள் என்ற அடிப்படையில் நிறுவனத் தலைவர்களின் பரிந்துரைக்கமைய பயனாளிகள் தெரிவு செய்யப்படுவர்.

சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

பிரிவெனாக்களில் கற்கும் வறிய மாணவர்களுக்கு

இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில் பிரிவெனாக்களில் கற்கும் 5000 வறிய மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதோடு, முதல் கட்டத்தின் கீழ் 2024 மே மாதம் தொடக்கம் 12 மாதங்களுக்கு 3000 ரூபாவும் இரண்டாம் கட்டத்தின் கீழ் 24 மாதங்களுக்கு 6,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மேலும் இரு புலமைப்பரிசில் திட்டங்கள் அறிமுகம் | President Fund Has Started 2 Scholarship Schemes

இது தொடர்பிலான மேலதிக விபரங்களையும் விண்ணப்பத்தையும் www.presidentsfund.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் www.facebook.com/president.fund உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோல் இந்த விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்களை 2024-05-10 நாளின் அரச வர்தமானியில் பிரசுரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புலைமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்கு பிரிவெனாக்களில் பயிலும் வறிய மாணவர்கள் உரிய வகையில் நிரப்பட்ட, விண்ணப்பங்களை 2024 மே 22 ஆம் திகதிக்கு முன்னதாக பிரிவெனா தலைவர்/நிறுவனத் தலைவரிடம் மட்டும் கையளிக்க வேண்டியது அவசியமெனவும், அதன் பின்னர் நிறுவனத் தலைவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் விண்ணப்பம் வலயத்துக்கு பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் ஊடாக ( பிரிவெனா) கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.

உயர்தரத்திற்கு தெரிவாகி தகவல் தொழில்நுட்ப பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை தொலைத் தொடர்பாடல்கள் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பின் கீழ் அதிபர் நிதியத்தினால் இந்த புலைமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

புதிய விசா முறைமை ஊடாக வருடாந்தம் 1800 கோடி ரூபா மோசடி!: சபையில் அம்பலப்படுத்திய சம்பிக்க

புதிய விசா முறைமை ஊடாக வருடாந்தம் 1800 கோடி ரூபா மோசடி!: சபையில் அம்பலப்படுத்திய சம்பிக்க

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்

அனைத்து கல்வி வலயங்களிலும் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் வலயமொன்றில் குறைந்தபட்சமாக 50 மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக தெரிவு செய்யப்படும் 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளுக்கு 24 மாதங்களுக்கு 6,000 ரூபா வழங்கப்படும்.

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மேலும் இரு புலமைப்பரிசில் திட்டங்கள் அறிமுகம் | President Fund Has Started 2 Scholarship Schemes

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை www.facebook.com/president.fund உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் மற்றும் www.presidentsfund.gov.lk இணையத்தளம், கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளமான www.moe.gov.lk, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவின் இணையப்பக்கத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்களை 2024 மே 22 ஆம் திகதிக்கு முன்னதாக அதிபர் நிதியத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி அதிபரால் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட கொள்கைப் பிரகடன உரைக்கு அமைவாக 2024 ஆம் ஆண்டிற்குள் பாடசாலை மாணவர்களுக்கான பல புலைமைப் பரிசில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் 2022/2023 க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் 100 கல்வி வலயங்களுக்கு 60 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரையில் 6000 ரூபா வழங்கப்படவுள்ளது.

தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு....! மகிந்த வெளியிட்ட தகவல்

தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு....! மகிந்த வெளியிட்ட தகவல்

பொருளாதார நெருக்கடி

தற்போதும் இந்த புலைமைப்பரிசில் திட்த்திற்காக தெரிவு செய்யப்பட்ட 6000 மாணவர்களின் விவரம் அதிபர் நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் இணையத்தளத்திலும் வௌியிடப்பட்டுள்ளது.

அவர்களுக்காக 2024 ஆம் ஆண்டிலிருந்து புலமைப் பரிசுத் தொகை நிலுவை தொகையுடன் சேர்த்து வழங்கப்படவுள்ளது. அதேநேரம் கல்விச் செயற்பாடுகளுக்காக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் 01 – 11 தரம் வரையிலான 100,000 பிள்ளைகளுக்கான அதிபர் நிதியத்தின் புலமைபரிசில் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மேலும் இரு புலமைப்பரிசில் திட்டங்கள் அறிமுகம் | President Fund Has Started 2 Scholarship Schemes

நாடளாவிய ரீதியிலிருக்கு 10,126 பாடசாலைகளை உள்வாங்கி ஒரு பாடசாலைக்கு குறைந்த பட்சமாக 04 புலமைப் பரிசில்களும் அதிகட்சமாக 04 புலமைப் பரிசில்களும் வழங்கப்படவிருப்பதோடு, 100,000 பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா என்ற அடிப்படையில் வழங்குவதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதும் விண்ணப்பதாரர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் விரைவில் புலமைப் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

தற்போதும் விண்ணப்பதாரர்களின் தகவல்கள் வலயக் கல்விக் அலுவலகங்கள் ஊடாக அதிபர் நிதியத்திற்கு அனுப்பப்படும் நிலையில், தரவுகள் முழுமையாக கணினி மயப்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்களுக்காக திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு புலமைப் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறுஞ்செய்தி (SMS) ஊடாக அறிவிக்கப்படும்.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019