புதிய கணக்காய்வாளர் நாயகத்துக்கு பெயர் முன்மொழிந்த ஜனாதிபதி!
தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றொரு பெயரை முன்மொழிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபை நாளை (31) கூடவுள்ளதாகவும், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பதவி வெற்றிடம்
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் நான்கு பெயர்களை முன்மொழிந்திருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அரசியலமைப்பு சபை அதன் நிர்வாக அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தத் தவறியதால் கணக்காய்வாளர் நாயகம் பதவி இன்றுவரை வெற்றிடமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், புதிய அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரின் தலைமையில் நாளை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |