தனி மனித சர்வாதிகார ஆட்சி இதுவே - புதிய சட்டத்தை முற்றாக எதிர்க்கும் சுமந்திரன்!

M A Sumanthiran Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Kalaimathy Mar 28, 2023 09:32 AM GMT
Report

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.   பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே நடைமுறையில் இருக்கின்றது. இது அனைவருக்கும் தெரிந்திருக்கின்றது.

இது ஆரம்பத்தில், ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆண்டு அது நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. 

 ஐரோப்பிய சங்கத்திற்கு வாக்குறுதியளித்த ரணில்

தனி மனித சர்வாதிகார ஆட்சி இதுவே - புதிய சட்டத்தை முற்றாக எதிர்க்கும் சுமந்திரன்! | Prevention Terrorism Act Anti Terrorism Act Jaffna

மிகவும் மோசமான ஒரு சட்டம் என பலராலே விமர்சிக்கப்படுகின்ற சட்டம், அதை நீக்குவதாக தற்போதைய அதிபர், பிரதமராக இருந்த போது 2017ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். ஐரோப்பிய சங்கத்திற்கு வாக்குறுதியும் அளித்திருந்தார்.   அதற்கு பிறகு தான் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றி பயங்கரவாத தடுப்புசட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

அது மக்கள் பிரதிநிதிகளோடும் பொது அமைப்புகளோடும் கலந்துரையாடப்பட்டு அந்த வேளையிலே பல தவறுகளை சுட்டிக்காட்டி பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.  2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை சாட்டாக வைத்து அதனை நிறைவேற்றாமல் கைவிட்டார்கள்.

இப்பொழுது கொண்டு வந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது அல்ல, இப்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட மோசமானதாக காணப்படுகின்றது.   

தமிழ் மக்களுக்கு ஏற்கனவே நடந்த அத்துமீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறல்களை கூறுவது எல்லாவற்றையும் இருப்பதையும் விட மோசமாக கொண்டு வரப்படுகின்றது.   பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாங்கள் முற்று முழுதாக எதிர்க்கிறோம். அதனை நிராகரிக்கின்றோம். அதற்கு எதிரான சட்டநடவடிக்கை எடுப்போம்.

புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு

தனி மனித சர்வாதிகார ஆட்சி இதுவே - புதிய சட்டத்தை முற்றாக எதிர்க்கும் சுமந்திரன்! | Prevention Terrorism Act Anti Terrorism Act Jaffna

அதற்கு மேலாக புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக இருந்தால், அது முதலிலே பொது அமைப்புக்களோடு பேசி இணங்கப்பட வேண்டிய விடயம் ஆனால் இதில் இன்னொரு விடயத்தை குறிப்பிட வேண்டும் பயங்கரவாத தடுப்பு சட்டம் நீக்கப்படல் சம்பந்தமாக மனித உரிமை ஆணைக்குழு ஏற்கனவே சென்ற வருடம் ஒரு சிபாரிசினை முன்வைத்திருக்கின்றது.   

அதாவது பயங்கரவாதத்திற்கான ஒரு விசேட சட்டம் தேவையில்லை என்று, எனவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் அரசாங்கம் கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கின்றோம். குறிப்பாக அரசாங்கமானது தான் செல்லுகின்ற பாதை ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்பதை அறியும்,   தேர்தல்கள் நடத்தப்படாமல் ஜனநாயக பாதையில் இருந்து அரசாங்கம் விலகி மாகாண சபை தேர்தலை பலகாலம் முடக்கி வைத்து தற்பொழுது உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட அதனை நடத்தாது நிதி நிலைமையை காரணம் காட்டி நாட்டில் ஒரே ஒரு நபர் தடுத்து வைத்திருக்கின்றார்.

சர்வாதிகார ஆட்சி

தனி மனித சர்வாதிகார ஆட்சி இதுவே - புதிய சட்டத்தை முற்றாக எதிர்க்கும் சுமந்திரன்! | Prevention Terrorism Act Anti Terrorism Act Jaffna

இந்த செய்கையின் மூலமாக இது ஒரு ஜனநாயக ஆட்சி முறை இல்லை ஒரு தனி மனித சர்வாதிகார ஆட்சி நாட்டிலே நடக்கின்றது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக இருக்கின்றது.   

ஆகையினால் இந்த மோசமான சூழலிலே இப்படியான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற ஒரு விசேட சட்டத்தை கொண்டு வந்து அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை தெரிவிக்கின்ற மக்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தண்டிப்பதற்குமான செயற்பாட்டிலே அரசாங்கம் இறங்கி இருக்கின்றது இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026