கடந்த ஆட்சியாளர்களே அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம்! சாடும் தமிழ் எம்.பி

Sri Lanka Government Of Sri Lanka National People's Power - NPP
By Harrish Jan 27, 2025 02:20 PM GMT
Report

கடந்த கால ஆட்சியாளர்களே நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடுக்கு காரணம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்(M.Jegatheeswaran) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளாார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ நாம் நாடாளுமன்றம் செல்கின்ற நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களிலே ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திலே எங்களது பிரசன்னம் இருக்கும்.

இலங்கை விமானப்படையின் 20வது தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் 20வது தளபதி நியமனம்

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

இந்நாட்களிலே மக்கள் தங்களுடைய குறைகளினை இங்கு வந்து எம்மிடம் தெரிவித்துக்கொள்ள முடியும்.

பொதுவாகவே அரசாங்கத்தின் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியிலே காணப்படுகின்றது, என்றாலும் கூட எமது இந்த ஐந்து வருட ஆட்சிக்காலத்தினுள் எங்களால் தெரிவிக்கப்பட்ட அனைத்து விடயங்களும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும்.

குறிப்பாக நாம் ஆட்சியமைத்து மூன்று மாத காலப்பகுதிக்குள் நாம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் படிப்படியாக பல்வேறுபட்ட விடயங்களை தீர்த்து வைத்துக்கொண்டு இருக்கின்றோம்.

கடந்த ஆட்சியாளர்களே அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம்! சாடும் தமிழ் எம்.பி | Previous Gov Were Responsible For Shortage Of Rice

முப்பது வருட காலமாக ஏற்பட்ட மலையளவான பிரச்சனைகளை ஓர் குறிப்பிட்ட சில வாரங்களிலோ அல்லது குறிப்பிட்ட சில மாதங்களிலோ தீர்த்து வைப்பது என்பது எம்மாலும் முடியாது யாராலும் முடியாது.

மேலும் அரசின் மீது தேங்காய் விலை மற்றும் அரிசி விலை அதிகரித்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. 

நாம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களேயாகின்ற நிலையில் அரிசி விலை தொடர்பாக எம்மிடம் கேட்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் இந் நெல்லினை சேமித்து வைத்து உரிய பொறிமுறையின் கீழ் மக்களிற்கு அரிசியினை விநியோகிப்பதற்கான செயன்முறையினை மேற்கொண்டிருந்தால் இவ்வகையான தட்டுப்பாடுகளும், விலை அதிகரிப்பும் ஏற்பட்டிருக்காது.

தவறி கூட இந்த செடிகளை வீட்டில் வளர்க்காதீர்கள்!

தவறி கூட இந்த செடிகளை வீட்டில் வளர்க்காதீர்கள்!

அரிசி தட்டுப்பாடு

எதிர்வரும் காலங்களிலே இவ்வகையான தட்டுப்பாடு ஏற்படாது என்பதுடன், அதற்கான நடவடிக்கையினை நாங்கள் ஏற்படுத்தி இருக்கின்றோம். 

இதுவரை காலமும் குறிப்பிட்ட ஐந்து, ஆறு பாரிய வியாபாரிகளினாலேயே அரிசி விலை தீர்மானிக்கப்பட்டு வந்ததன் விளைவினை நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம்.

எதிர்காலத்திலே இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது. இதற்கான சகல முன்னாயத்தங்கள் அனைத்தையும் நாம் செய்திருக்கின்றோம், என்பதுடன் அதில் இருந்து மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

கடந்த ஆட்சியாளர்களே அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம்! சாடும் தமிழ் எம்.பி | Previous Gov Were Responsible For Shortage Of Rice

குறிப்பாக வன்னியிலே காணிப்பிரச்சினை பாரியளவில் காணப்படுகின்றது. எனவே இதனை தீர்க்கும் முகமாக தொடர்ச்சியான கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றோம். 

கடந்த வாரம் கூட சுற்றாடல் அமைச்சரினை சந்தித்து வன வள திணைக்களம், ஏனைய திணைக்களம் தொடர்பான முறைப்பாடுகளினை மேற்கொண்டிருக்கிறோம்.

அத்துடன் குறித்த திணைக்கள அதிகாரிகளுடனும் கலந்துரையாடி இருக்கின்றோம். அதன் அடிப்படையில் எதிர்வரும் காலத்திலே அதற்குரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதாக வாக்குறுதி வழங்கியுள்ளனர்." என அவர் தெரிவித்துள்ளார்.

உலகை உலுக்கிய தென் கொரிய விமான விபத்து: விசாரணையில் வெளியான முக்கிய ஆதாரங்கள்

உலகை உலுக்கிய தென் கொரிய விமான விபத்து: விசாரணையில் வெளியான முக்கிய ஆதாரங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
நன்றி நவிலல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021