கைதிகளின் போராட்டத்தால் இடிந்து வீழ்ந்த சிறைச்சாலை கூரை
நீகொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலை அடுத்து கைதிகள் கூரை மீதேறி நடத்திய போராட்டத்தால்சிறைச்சாலை கூரை இடிந்து வீழ்ந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு கூரை இடிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த கைதிகளில் ஒரு குழுவினர் காயமடைந்துள்ளனர்.
கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதிகள்
நேற்றுமுன்தினம் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே மோதல் தொடங்கியதை அடுத்து முதலில் பெண் கைதிகள் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அடுத்து ஆண் கைதிகளும் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது, சிறிலங்கா இராணுவம், காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் காவல்துறை கலவரத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஏராளமான அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நுழைந்துள்ளனர்
இதற்கிடையில், சிறைச்சாலைக்கு வெளியே திரண்டுள்ள கைதிகளின் உறவினர்கள், கைதிகளை வெளியே கொண்டுவரக் கோரி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
20 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
இதேவேளை இன்று (06) வெடித்த மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 நோயாளிகள், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர், சிறப்பு மருத்துவர் புஷ்பா கம்லத்கே தெரிவித்தார்.
மேலும் ஆபத்தான நிலையில் உள்ள சுமார் ஆறு நோயாளிகளை தேசிய மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |