சீர்குலைந்துவிட்டது இலங்கையின் சிறைச்சாலை அமைப்பு :கவலைப்படுகிறார் பீரிஸ்
இலங்கையின் சிறைச்சாலை அமைப்பு சீர்குலைந்துவிட்டது என்று மக்கள் ஐக்கிய எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இன்று (3) ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்குள் நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் இரண்டு கடுமையான சம்பவங்கள் பதிவாகியிருந்தபோதிலும், அவற்றுக்குப் பொறுப்பேற்கத் தலைவர் இல்லை என்று ஜி.எல். பீரிஸ் கூறினார்.
மிகவும் அபாயகரமான நிலைமை
கொழும்பு மால் வீதி அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் மேலும் பேசிய ஜி.எல். பீரிஸ், தெரிவித்தவை வருமாறு,

நமது நாட்டின் சிறைச்சாலை அமைப்பு தொடர்பாக மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை எழுந்துள்ளது. சிறைச்சாலை அமைப்புக்கு ஒரு ஆணையாளர் நாயகம் இல்லை.
ஒரு வருடமாக வெற்றிடமாக உள்ள பதவி
நமது நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் கட்டுப்படுத்தும் இறுதி அதிகாரம் ஆணையாளர் நாயகத்திற்கே உள்ளது. அந்த மிகவும் முக்கியமான பதவி இன்னும் காலியாகவே உள்ளது. அது நிரப்பப்படவில்லை.

அந்தப் பதவி ஒரு வருடம் இரண்டு மாதங்களாகக் காலியாக இருக்கிறது. அதற்கு இன்னும் நிரந்தர நியமனம் செய்யப்படவில்லை. இதன் பொருள், சிறை அமைப்புக்குத் தண்டு இருக்கிறது, ஆனால் தலை இல்லை, என்றார்ஜி.எல். பீரிஸ்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |