கோட்டாபய இருக்கும் வரை எந்த உதவியும் இல்லை! எச்சரித்த நாடாளுமன்ற உறுப்பினர்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரை யார் பிரதமராக வந்தாலும் நாட்டு நிலைமைகளுக்கு தீர்வு காண முடியாது. கோட்டாபய அரசாங்கத்தில் தீர்வின்மையே தொடர்கின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
நேற்று(19) இடம் பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. "இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை குறை கூறி மத்திய வங்கி கொள்ளையர்களை பிடிப்போம், ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரியை கைது செய்வோம், என சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களின் தற்போதைய நிலை எங்கே தள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான உற்பத்தி பொருட்களில் வீழ்ச்சி கண்டுள்ள இலங்கை நாடு தேயிலை, ஆடை உற்பத்தி என்பனவும் இதில் அடங்குகிறது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக மோசமாக பாதிப்பை இந் நாட்டு மக்களும் முகங்கொடுத்து செய்வதறியாது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வேடிக்கையாக மாற்றியுள்ளது.
கடன் வாங்கும் நாடாக மாறியுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் கூட இந்த கோட்டாபய அரசு இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்றும் கூறியிருக்கிறது.
இது போன்ற வெளிநாட்டு தூதுவராலயங்களின் தூதுவர்களும் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள். மக்கள் தாங்கி கொள்ளாமல் வீதிக்கு இறங்கி கோட்டா கோ கோம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி இடம் பெற்ற தாக்குதல் கண்டிக்கத்தக்கது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இதற்கு யார் பொறுப்புக் கூறுவது பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் இங்கிருந்து இனவாத சாயம் பூசி பேசப்பட்டது. ஆனால் இங்கு கொல்லப்பட்ட எந்த மதமோ இனமோ இருந்தாலும் அதை யார் பொறுப்பேற்பது, வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில், மரணித்த நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பத்துக்கும் உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுடைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை நாடாளுமன்றில் முன்வைக்கவில்லை பொருட்களின் நாளாந்த விலை ஏற்றம் வரிசை என பல பிரச்சினைகள் தொடர்கிறது இதற்கான தீர்வினை முன்வையுங்கள் தீர்வின்மை பெரும் கவலையளிக்கிறது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் அச்சிட வேண்டியுள்ளது என பிரதமர் கூறிய கதையே சொல்கிறார் எனவே புதிய பிரதம மந்திரி அவருடைய எதிர்கால திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் "எனவும் கோரிக்கை விடுத்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
