பிரதி பாதுகாப்பு அமைச்சரால் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சிக்கல்! எம்பி வெளிப்படை
கிழக்குக்கு பொறுப்பான தளபதியாகப் பணியாற்றிய தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அந்தப் பதவியில் நீடிப்பதால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக நடத்தப்படாது ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிக்கை
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், "தற்போதைய அரசாங்கமும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனாதிபதித் தேர்தலின் போது, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியது.
இருப்பினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் சவாலானவை என்று ஜனாதிபதி சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அந்த சவால் பிரதி பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து வருகிறதா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.அரசாங்கம் அரசாங்கத்தை விசாரிக்க வேண்டும் என்ற கருத்தையும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சரின் பதவி
அதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளில் எப்படியாவது தொடர்புடைய நபர்கள் அரசாங்கத்திற்குள் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நடந்தபோது அரசாங்கத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் கிழக்கு கட்டளைத் தளபதியாக இருந்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பான ஒருவர் தற்போதைய அரசாங்கத்திலும் பொறுப்பேற்பது கேள்விக்குறியாக உள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கீழ் உள்ள அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன.
எனவே, கிழக்கு கட்டளைத் தளபதியாக இருந்த தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை சுயாதீனமாக நடத்துவதில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
